பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/389

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞான உழவு!

377


என்ற எரு இடவேண்டும். எது உண்மை? பொய்யாது ஒழுகுதலே உண்மை.

வள்ளுவம் வரையறுத்துக் காட்டிய வாய்மையில் வாழ்தலே உண்மை. மனத்தின்கண் விளைந்த சிவம் என்ற பயிர் முறையாக வளர, நாள்தோறும் ஆர்வம் என்ற தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். இவ்வளவும் செய்த பிறகும் பயிர் வளர்ந்து கதிர் முற்றி நிற்கும்போது எருதுகளால் அழிவு வராமல் காப்பாற்ற வேண்டும். எருதுகள், விளைந்த கழனியிற் புகுந்து உழப்பும்; கதிர்களைத் தின்னும்; விளைந்த கதிர்களைக் காலிற்போட்டு மிதிக்கும்; விரட்டச் சென்றாலும் அவைகள் எதிர்த்துத் தாக்கும்.

அதுபோல, மனத்தின் கண் விளையும் சிவப் பயிரை ஐம்பொறிகள் அழிக்கும். ஐம்பொறிகள் சிவம் என்னும் பயிரை அழிக்காமல் சாந்தம். தகைமை, சீலம் ஆகிய வேலிகளை அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இங்ஙனம் மனத்தின் கண் சிவப் பயிரைக் காத்தால் ஞ்ானம் பழுக்கும். இச் சிவப்பயிர் புண்ணியத்தை நல்கும். உயிரினைச் சேமப்படுத்தும் என்று வேளாண்மைத் தொழிலோடு ஞானத்தை உவமைப்படுத்தி, பட்டினத்தார் அருளியுள்ள பாடல் ஓதி இன்புறத் தக்கது.

“உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையறவு உளவோ

அதனால்,

நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வை செய்து
அன்பென் பாத்தி கோலி, முன்புற
மெய்யெனும் எருவை விரித்துஆங்கு ஐயமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று

கு.இ.VIII.25.