பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்”

என்றும் வரும் திருமுறைகள் காண்க. திருக்கோயில் வழிபாடு. தமிழர் சமயங்களின் காரண காரியப் பயன்களாகும். அதே போழ்து அகநிலை வழிபாடும் வற்புறுத்தப் பெறுகிறது.

"உயிரா வணம்இருந்து உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டிவாழ்தி”

என்ற அடிகளைக் கற்கவும்; இவ்வாறு உருவெழுதிப் பழகவும்.

தமிழ்ச் சமய வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி கலை முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. திருக்கோயில்கள் சிற்பக் கலையின் பெட்டகமாகும். ஆடல் வல்லான் திருமேனி தத்துவம், சிற்பம் மெய்ப்பொருள் தேர்வு ஆகியவற்றின் விளக்கமாகும். திருக்கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல் ஆகியனவற்றிற்குப் போதிய இடம் உண்டு. இறைவன் சந்நிதியில் திருப்பதிகம் விண்ணப் பித்தல் - பண்ணிசைப்பாடல் ஒதுதல் வழக்கு நடனம் ஆடுதல் ஆகியனவும் உண்டு. திருக்கோயில் அமைவினை,

"இன்னிசை விணையர் யாழின்ர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே”

(திருவாசகம்-திருப்பள்ளியெழுச்சி - 4)

என்ற பாடலில் காணலாம். நம்பியாரூரர்,