பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமுறைத் திருநாளில் தலைமை உரை

145


"உழவாரப்படை கையிலுடையான் வைத்தனதமிழ்
குருவாகக் கொடுசிவனடி சூடத்திரிபவர்
குறுகார்புக் கிடர்படுகுடர் யோனிக்குழியிலே"

என்பது அன்னார் உரை. ஞானத் தவமுனியாக விளங்கி அருண்ஞானப் பாக்களை அருளிய தாயுமான அடிகள் -தேவாரத் திருமுறைகளின் பெருமையை-இனிமைப் பண்பை-இறைவன் உகந்து கேட்கும் இயல்பை மிக அழகாகப் பேசியுள்ளார்கள்.

"தேவரெலாந் தொழச் சிவந்த செந்தாண் முக்கட்
செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக
மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செவிக்கே
மூடனே னியம்பிய சொன்முற்று மோதான்”

என்பது அடிகளது அருமைப்பாடல்

வடமொழி மறைளும் தமிழ் மறைகளும்

வடமொழி மறைகள் இவ்வுலகின் மிகப் பழைய நூல்களாகும். மக்களிடையே சமய வாழ்க்கை தொடங்கப் பெற்ற காலத்திலெழுந்தவை, இருக்கு முதலிய மறைகள். இம்மறைகள் சைவச் சார்புடையன. சைவத்தின் கடவுளாம் சிவபெருமானுடைய பெருமையைப் பலபடக் கூறுவன. இந்த நாட்டில் எழுந்த ஏனைய நூல்களெல்லாம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவேயாம். சிறப்பாகச் சைவ சாத்திரங்களும், திருமுறைகளும் வேதங்களிற் பேசப்பட்டுள்ள செய்திகளை மிகத் தெளிவாக விளக்கு கின்றன. இதனை "வேதம் பசு” என்று வருகின்ற பழம் பாடல் விளக்குகின்றது. திருமுறைகளும், வேதங்களும் பல இடங்களில் ஒரே கருத்தைப் பேசுகின்ற முறையில் ஒத்துள்ளன. இந்த நாட்டில் வேதங்கள் முதல், பிற மதச் சார்புடையவையாகக் கருதப் பெறுகின்ற பகவத் கீதை, பாரதம், இராமாயணம் முதலிய அனைத்தும் சிவபெருமான் முழுமுதற் தலைவன் என்பதையே பேசுகின்றன. ஊழித் தலைவனாகச் சிவபெருமான் விளங்குகின்றான் என்பதை,