இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. | குங்குவியக்கலயர் | ஆவணி-மூலம் | (1) திருக்கோயில்-திருமடங்களில் தூபமிடும் கலசங்கள் சீரமைத்தலும், தேவைக்கு வாங்குதலும். | |
(2) தூபமிடப் பயன்படும் பொருள்களின் தரம் பற்றி ஆய்வு செய்தல். | ||||
(3) தூபமிடும் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நடுதல். | ||||
25. | குலச்சிறை நாயனார் | ஆவணி-அனுடம். | (1) தக்க அன்பர்களுடன் சமய வளர்ச்சிக் கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து திட்டமிடல். | |
(2) தக்க சமயத் தொண்டர்களுடன் நட்புக் கொள்ளுதல். | ||||
(3) சமயத் தொண்டர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | ||||
(4) சமயப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல். | ||||
(5) நமது மக்கள் மதமாற்றங்களுக்குள்ளாகாமல் பாதுகாத்தல். | ||||
(6) பிற மதத்துக்குப் போனவர்களை நமது மதத்திற்குத் திரும்ப அழைத்தல். | ||||
(7) அருள்நெறித் திருக்கூட்ட அமைப்பை வலிமைப்படுத்துதல். |