பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24. குங்குவியக்கலயர் ஆவணி-மூலம் (1) திருக்கோயில்-திருமடங்களில் தூபமிடும் கலசங்கள் சீரமைத்தலும், தேவைக்கு வாங்குதலும்.
(2) தூபமிடப் பயன்படும் பொருள்களின் தரம் பற்றி ஆய்வு செய்தல்.
(3) தூபமிடும் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நடுதல்.
25. குலச்சிறை நாயனார் ஆவணி-அனுடம். (1) தக்க அன்பர்களுடன் சமய வளர்ச்சிக் கருத்துக்கள் பற்றி ஆராய்ந்து திட்டமிடல்.
(2) தக்க சமயத் தொண்டர்களுடன் நட்புக் கொள்ளுதல்.
(3) சமயத் தொண்டர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(4) சமயப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல்.
(5) நமது மக்கள் மதமாற்றங்களுக்குள்ளாகாமல் பாதுகாத்தல்.
(6) பிற மதத்துக்குப் போனவர்களை நமது மதத்திற்குத் திரும்ப அழைத்தல்.
(7) அருள்நெறித் திருக்கூட்ட அமைப்பை வலிமைப்படுத்துதல்.