பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதலும் முடிவும்

81


என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கூப்பிட்டுப் பார்த்தார். நாய் வந்தபாடில்லை. வராததோடு மட்டுமின்றிச் செய்ந்நன்றி உணர்ச்சியைக் கூட அந்தநாய் காட்டிக் கொள்ளவில்லை. எனினும் வளர்த்தவருக்குப் பாசம் விட்டதா என்ன? அவர் நாயின் அருகிற் சென்று அந்த மண்ணோடு அந்த நாயை வாரியணைத்துத் துரக்கிக் கொண்டு செல்கிறார். இந்த நிகழ்ச்சியைப்போலவே ஆன் மாக்களின் வாழ்க்கையும் இருக்கிறது. ஆன்மா நாய், வளர்ப்ப வன் இறைவன், குப்பைமேடு வினைச்சேறு என்று தொடர்புபடுத்திச் சிந்தித்தால் தெளிவாக விளங்கும். உயிர்கள் அன்றாடம் கோடிக்கணக்கான வினைகளைச் செய்கின்றன. இல்லை செய்துகொண்டேயிருக்கின்றன. உயிர்களின் வாழ்வு வினைச்சூழலிலேயே சுழல்கின்றது.

இங்ஙனம் வினைவழிப்பட்டு அல்லல் வழிக்குச் செல்லும் ஆருயிரை அருள்வழிப்படுத்தத் தந்தையும், தாயு மாகிய ஈசன் திருவுளங்கொள்கின்றான். இந்தக் கருணை எண்ணத்தோடு இறைவன் வினைவழிப்பட்டுழலும் உயிர்கள் மாட்டு இறங்கி வருகிறான், உயிர்கள் விரும்பாமலேயே,

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
 ஊக்கம் உடையான் உழை” .

என்றே வள்ளுவரும் கூறுகின்றார். புண்ணியம் பண்ணிய பெருமக்களிடம்தான்் பணம் போகும் என்று அறிஞனும்சமயத் தலைவரும் புகன்றதில்லை. இந்தக் கண் மூடிக் கொள்கை நாட்டை விட்டே தொலையவேண்டும்.

"இரப்பவர்க்கு ஈயவைத்தார்; FLafಹಅ அருளும் வைத்தார்" என்றே திருநாவுக்கரசரும் செப்பியருளினார். ஆகவே, -

"செல்வத்துப் பயனே ஈதல்" என்ற கொள்கை நாட்டில் பரவவேண்டும் என்று அருள் நெறி முழங்கியது.