பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கையர்க்கரசியார்

87



தமிழகத்தில் பண்டைக்காலத்தில் வழங்கிய சமயங்கள் இரண்டு. அவை முறையே சைவ, வைணவச் சமயங்கள் ஆகும். இவ்விரண்டு சமயங்களும் சான்றோர் வாழ்க்கையில் - முதிர்ந்த அறிவில் - அனுபவத்தில் - தத்துவத் தெளிவில் தோன்றியவை; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியவை; நல்வாழ்வுக்குத் துணை செய்பவை. இவ்விரண்டு சமய நெறிகளும் தமிழில் தோன்றி வளர்ந்தவை; தமிழால் வளர்ந்தவை. இச்சமயங்கள் தமிழை வளர்த்தும் பெருமை தேடிக்கொண்டன.

சைவம், தமிழ்நாட்டின் பழைமையான சமயம். சங்க கால இலக்கியங்களில் சைவசித்தாந்தத் தத்துவங்கள் ஊடுருவிக் கிடக்கின்றன. காப்பியங்களிலும் அப்படியே. பக்தி இலக்கிய காலமாகிய ஏழாம் நூற்றாண்டு முதல் நாயன் மார்களும், ஆழ்வார்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளும் தமிழில் பாடித் தமிழை வளர்த்தனர். *

தமிழர் சமயங்களாகிய சைவமும், வைணவமும் தமிழரின் வாழ்வியலில் முகிழ்த்த சமயங்கள். இச் சமயங்கள் தோன்றி வளர்ந்த தாயகம் தமிழகமே! இச்சமயங்களுக்குரிய மொழி தமிழேயாம். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பினார்கள் என்றால் செந்தமிழின் பயனாகிய சிவநெறியையும் பரப்பினர் என்பது கருத்து. தமிழ்நாட்டின் சமயங்களைச் "செழுந்தமிழ் வழக்கு” என்று சேக்கிழார் புகழ்ந்து பேசுவார்.

தமிழில் சமய வாழ்வு, இயற்கையோடிசைந்தது; எளிதான்து. இதில் விரதங்களால் வருந்தும் செயல் முறைகள் இல்லை. புறச் சடங்குகளையே மையமாகக் கொள்ளாமல் நெஞ்சத்தை இடமாகக் கொள்வது.

"இமைப்பொழுதும் என்னெஞ்சில்
நீங்காதான்் தாள்வாழ்க’

என்றும்,