சீற்றம்
113
"இங்கே ஏன் வந்து மாட்டிக்கொண்டேன் என்று அந்த கூர்க்கா நினைப்பவன் போல் காணப்பட்டான்.
'உள்ளே போகலாமா?" என்றேன்.
'அதிகம் பேசக் கூடாது" என்றான்.
'பேசத் தானே போகிறேன்' என்றேன் .
'அவர்களைப் பேச விடு; நீ எதுவும் பேசாதே; அது தான் நல்லது' என்றான்.
அவன் அறிவாளி; அனுபவசாலி எனவும் பட்டது; திறமைசாலி எனவும் தெரிந்தது.
அவன் சொல்லாமல் இருந்தால் கொட்டிக் குமுறி இருப்பேன். அதனால் எந்தப் பயனும் விளைந்திருக்க முடியாது. அறிவிக்க நான் செல்லக்கூடாது; அறிந்துவரப் போவதுதான் அறிவுடைமை என்பதை அவன் அறிவித் தான.
அவனுக்கு நான் டிப்ஸ் எதுவும் தரவில்லை என்றா லும் அவன் எனக்குத் தந்த 'டிப்ஸ் அது. அவனுக்குப்பானு மேல் இருந்த மரியாதை அவன் எனக்கு உதவி செய்தற் குக்காரணம்.
-3
உள்ளே போனால் அவர்கள் வரவேற்பார்களா என்ற பயம் இருந்தது; நான் என்ன வி.ஐ.பியா அவர்கள் வர வேற்புக்குக் காத்து இருக்க. என் நண்பர் அச்சகர்