190 μ π β' துக்கொண்டே இருப்போம். அரசு அதிகாரியைக்கெடுத்து கொண்டே இருப்போம். அது மாமுல்' என்ற முத்திரை யைத் தந்துவிடும். அதனால் தான் டாக்டர் மைத்துன ரிடம் சொல்லி உங்கள் உதவி செய்ய வேண்டுகிறோம். பணம் வாங்காவிட்டால் போகிறது. வாங்குகிறவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும். அதற்குத்தான் வந்தேன்' என்று வருகையின் காரணத்தைக் கூறினார் . அவர் சொல் நியாயமாகப் பட்டது. இவர் உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் காரியங்கள் ஒழுங்காக நடக்கின்றன. இவரால்தான் நடந்தது என்று காட்டிக் கொண்டால் போதும். இல்லாவிட்டாலும் இவரால் கெடுதி இல்லையென்று காட்டிக் கொண்டால் அதுவே பொருள் வந்து குவிவதற்கு வாய்ப்புத் தரும். அரசாங் கத்திற்கு நஷ்டம் உண்டாக்கக் கூடாது. விதிகளை மீறக் கூடாது. அப்பொழுது பணம் வாங்கினால் என்ன தவறு' இருக்கிறவன் கொடுக்கிறான். வாங்கறதிலே தவறு இல்லை' என்று என்னைச் சமாதானம் செய்து கொண் டேன். 'எங்கடா போயிட்டு வந்தே?' என்று கேட்டேன் என் மகனை. "படம் பார்த்து விட்டு வருகிறேன்'. 'டிக்கெட் எப்படிக் கிடைத்தது?" "கியூவை ஒழுங்காகப் பாதுகாத்துக் கொள்ளப் போலீஸ் காரர் இருந்தார். அவருக்கு டிப்ஸ்' தந்தேன் அவ்வளவு தான் '0' Y' ஆகிவிட்டது. அவர் நைசாக என்னைத் தள்ளிவிட்டார்',
பக்கம்:குப்பைமேடு.pdf/192
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை