குமரியின் மூக்குத்தி 7
பலவிதமான மணிகளை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்குக் கொஞ்சம் தெலுங்கு பேசத் தெரியும். அதில் நன்றாகப் பேசத் தெரிந்துகொண்டான்.
எல்லாம் ஆறுமாத காலத்தில் நிகழ்ந்தவை. அப் போதப்போது அரசனிடம் எப்படியாவது மூக்குத்தியை வருவிப்பதாகச் சொல்லிக்கொண்டே வந்தான். ஒரு நாள் கருணாகரத் தொண்டைமான் ஒரு வைர வியாபாரியைப் போலக் கோலம் பூண்டு, கையில் நவமணிகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு கலிங்க நாட்டை நோக்கிப்புறப் பட்டான். அங்கே உள்ள செல்வர்களிடம் மிகவும் உயர்ந்த வைரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி அவர்களுக்குக் காட்டினன். அரசனுடைய மந்திரிகளிடம் பழகினான்.
அவர்கள் வாயிலாக அரசனையும் அணுகினான்.
'எனக்கு வைரப் பரீட்சை நன்றாகத் தெரியும், மகா ராஜா. எந்த வைரத்தையும் கண்டு அதன் சரித்திரத்தையே சொல்லிவிடுவேன்' என்று சொன்னான். சோழ அரச னுடைய அரண்மனையில் உள்ள மணிகளை யெல்லாம் பார்த்திருப்பதாகச் சொன்னான். அப்போது அனந்த பதுமன் அவனே ஒரு கேள்வி கேட்டான். -
'என்னிடம் ஒரு வைரம் இருக்கிறது. அதற்கு ஒப் பானதை எங்கும் காணமுடியாது. நான் அதைக் காட்டு கிறேன். அதுபோல ஒன்றை நீ காட்ட முடியுமா?' என்று கேட்டான். . .
'என்னுடைய வழிபடு தெய்வம் முருகன். அவன் வைரமணி வேலை உடையவன். அவன் அருளால் வைர சம்பந்தமான செய்திகளே முன் கூட்டியே நான் அறிவேன். மாதேவி மூக்குத்தியில் உள்ள வைரத்தை மன்னர் பெருமான் நினைத்துப் பேசுகிறார் என்று தெரிகிறது. நான்
அதைப் பார்த்ததில்லை. பார்த்தால், அதற்குச் சமானம் .
என்ன, மேலான வைரத்தையே கொண்டுவந்து தருவேன்" என்றான் தொண்டைமான்.