பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளத்தில் முள்

83

வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் அவர் நிலையைக் கண்டு அஞ்சினார்கள். "என்ன இது? சரியாகச் சோறு தின்னாமல், கண்ணை மூடாமல் வேலை செய்தால் உடம்பு எதற்காகும்?" என்றார்கள். அவர் ஒன்றையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மூர்த்தன்யமாக அவர் ராஜ ராஜேசுவரியை உருவாக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மணியாகக் காலம் கழிந்து கொண்டிருந்தது. அவர் வேலையின் வேகம் அதிகமாயிற்று. -

அன்றைக்கு மறுநாள் நவராத்திரி. மாலை ஆறு மணி ஆயிற்று. ஒருவிதமாக உருவம் வந்துவிட்டது. கொஞ்சம் நுட்ப வேலைகள் பாக்கி. அவற்றைச் செய்ய மூன்று மணி நேரம் பிடித்தது. எல்லாம் ஆனபிறகு இரண்டு திரு வுருவங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தார் கலைஞர். இரண்டும் ஒன்றாக இல்லை. மற்றவர்களின் கண்ணுக்கு வேறுபாடு தோன்றாது. ஆனல் அவர் கண்ணுக்கு-நுட்பமான கலைக்கண்ணுக்கு-வேறுபாடு தோன்றியது. ஒன்று அசல்; மற்ருென்று நகல். ஒன்று உயிரின் படைப்பு: மற்றொன்று கையின் படைப்பு. ஒன்றுக்கு அன்பு விலை. மற்றொன்றுக்கு அழியும் பணம் விலை.

இதுவரையில் அவர் எதை யாருக்கு அளிப்பது என்பதைச் சிந்திக்கவே இல்லை. பணம் கொடுக்க முன் வந்தவர் பார்த்தது முதல் திருவுருவத்தை. அதையே கொடுத்து விடுவதாகத்தான் அப்போது எண்ணியிருந்தார். ஆனால் இப்போது - இதைத் தர ஒப்புக்கொண்ட பாவத்தை விட மகாபாவம் மூலத்தைக் கொடுப்பது!

மறுநாள் நவராத்திரி ஆரம்பம். கலைஞர் இரண்டையும் தனித் தனியே மறைத்து வைத்தார். செல்வருடைய ஆள் ஆயிர ரூபாயுடன் வந்தான். இரண்டாவது செய்த உருவை அவனிடம் அனுப்பினார். அதுவரையில் அவருக்கு ஒன்றும் ஒடவில்லை. அவன் கையில் அதைக் கொடுத்த பிறகு பெருமூச்சு விட்டார்.