பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இந்நிகழ்ச்சிகளை அடுத்துக் கான் சாகிபு தென் பாண்டிப் பாளையங்களை அடக்கிக் கப்பம் வசூலிக்குமாறு மறுபடியும் கும்பினி அரசாங்கத்தால் 1759ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டான். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மறுமுறையும் சர்வாதிகாரியான கான் சாகிபு செய்த முதல் வேலை மதுரைக்கு அருகில் இருந்த ஒரு பாளையக்காரனைக் கடுமையாகத் தாக்கி, அவனையும், அவனுக்காகப் போரிட்ட ஐந்நூறு கள்ளர்களையும் ஒரே நாளில் தூக்கிலிட்டுக் கொன்றதுதான். தன் பகைவர் நெஞ்சில் பெருந் திகிலை மூட்டக் கான் சாகிபு திட்டமிட்டுச் செய்த பெருஞ்செயலே அது. வீரம் நிறைந்த கள்ளர்களை அடக்கி ஒடுக்கிய பின், கான் சாகிபு சுதந்திர உள்ளம் கொண்ட பாளையக்காரர்களை அடக்குவதில் கண்ணுங் கருத்துமாய் ஈடுபட்டான். எழுநூறு சிப்பாய்களும், முந்நூறு குதிரை வீரர்களும் கொண்ட ஒரு பெரும் படையைக் கான் சாகிபு பூலித் தேவர் வசமாகியிருந்த பாளையங் கோட்டையைக் கைப்பற்றவும், மேற்கத்திய பாளையக்காரரான பூலித் தேவருடன், எட்டயபுரம் பாஞ்சாலங் குறிச்சிப் பாளையக்காரர்கள் சேர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்ளவும் அனுப்பி வைத்தான். 1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி, தானே 6400 சிப்பாய்களையும், 600 குதிரை வீரர்களையும் கொண்ட ஒரு பெரும் படையுடன், சுதந்திர வீரர்களை வாட்டி வதைக்கும் நோக்கத்துடன், ஏகாதிபத்தியக் கொடுங்கோலர்கள் சார்பில் புறப்பட்டான். முதலில், பூலித் தேவரும், வடகரைப் பாளையக்காரரும் கைப்-