பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பிரஞ்சுத் தளபதி மார்ச்சந் சதிகாரர்களோடு சேர்ந்து, கான் சாகிபைக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்தான். அதிகாரிகள் செய்தது கோட்டையெங்கும் காட்டுத் தீப் போல் பரவி விட்டது. கான் சாகிபின் மனைவியான பறங்கிப் பெண் மார்ச்சந்துக்கு ஒரு கடிதம் எழுதி, ‘ஐயனே, நாட்டையும், கோட்டையும் அதில் இருக்கும் நானாவிதச் செல்வங்களையும் உனக்கே தந்து விடுறேன்; என் நாயகனை மட்டும் விட்டு விடு’ என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். ஆனால், மார்ச்சந் கோரச் சிரிப்புச் சிரித்தான். அந்தப் பிரெஞ்சுத் தளபதியின் சதிகாரச் செயலைக் கேட்ட ஒரு முதலி, தாயை இழந்த சேய் போல் துடித்துப் புலம்பிக் கோட்டையெல்லாம் சுற்றி வந்து கூவினான். அவனைச் சுற்றி நூற்றுக் கணக்கான வீரர்கள், ‘எங்கே எங்கள் கான் சாகிபு? எங்கே அந்த மார்ச்சந்?’ என்று கேட்ட வண்ணம் வாளையுருவி வலம் வந்தனர். நிலைமையை உணர்ந்த மார்ச்சந் முதலியின் மார்பில் குறி பார்த்துச் சுட்டுக் கீழே வீழ்த்தினான். தலைவன் சாயக் கண்டதும், ஆத்திரம் அடைந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து, ஓடி மறைந்தனர். மார்ச்சந் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். தன் கையாட்களை அனுப்பி, அதே அக்டோபர் 13-ஆம் தேதி நள்ளிரவில் ஆர்க்காட்டு நவாபிடமும், ஆங்கில நாடோடிகளிடமும் உறவு பேசினான்; ஒப்பந்தங்களைக் கூறினான். அஞ்சா நெஞ்சன் கான் சாகிபை, கைகால்களையும் அசைக்க முடியாத நிலையில் பந்து போல் சுருட்டிக் கட்டிப் பகைவர்களின்