பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மோன இரவில் அழகிய ராஜபாட்டையில் கம்பீரமான வெண்புரவியை ஆரோகணித்துக் கடிவாளம் இல்லாமல் காலிடுக்கி இல்லாமல் இன்பச் சவாரி செய்தேன்.

அன்று -

அவள் சொன்ன வார்த்தைகளை ஆண்மகனாகிய என்னால் திருப்பிச் சொல்ல முடியாது. அவள் பேச்சைக் கேட்டு விழிப் படைந்தேன். முத்தங்களாலும், மணலாலும், கறைபட்டிருந்த நான் ஆற்றங் கரையைவிட்டுப் புறப்பட்டேன். கத்திமுனைப் பூக்கள் காற்றோடு போரிட்டன.

நான் ஒரு - நாடோடிக் கனவானாகப் பெருமிதத் தோடு நடந்து கொண்டேன். பூவேலைப் பாட்டுடன் கூடிய பெரிய கூடையில் வைக்கோல் வண்ணப் பட்டுத் துணிகளை

I 39