பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

口 口 口 பதிப்புரை

கவிஞர் முருகு சுந்தரம் நாடறிந்த கவிஞர். அவர் ஏறாத கவியரங்க மேடையோ அவர் கலந்து கொண்டு சிறப்பிக்காத இலக்கிய விழாக்களோ இல்லை என்று சொல்லலாம்.

மலருள்புதைந்திருக்கும் மணத்தைப் பற்றி வண்டுக்குத்தான் தெரியும். ஒரு கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை மற்றொரு கவிஞனால்தான் உணரமுடியும்.

உலகப் புகழ்பெற்ற கவிஞர் சிலரின் படைப்புக்களில் படிந்து தம்மை மறத்த கணங்கள் கவிஞர் முருகுவால் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கே உரித்தான உயிரோட்டமுள்ள கவிதைநடை சதங்கை கட்டி இந்நூலில் சஞ்சரிக்கிறது.

4