பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

கடவுள் இருக்கும் திசை அக்கா லத்தில் ஒருநாளே அறிவு மிக்க குருநானக் மெக்கா வுக்குச் சென்றிருந்தார் மேதையைக் காணப் பலர்வந்தார் ஆலயம் இருக்கும் திசைநோக்கி அவர்தம் கால்கள் தமைநீட்டித் சாலவும் ஒய்ந்தொரு கட்டிலிலே சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தார். அப்போ தவரைக் காண்பதற்கே அங்கொரு ஹாஜி வந்தாரே தப்பு நேர்ந்தது போல்வருந்தித் தலைவர் தம்மை அவர்நோக்கி, 'இறைவன் இருக்கும் திசைநோக்கி இப்படிக் காலை நீட்டுவதும் முறையோ முறையோ??? எனக்கேட்டு முடித்தார் உள்ளத் துயருடனே. களைப்பு மிகுதி யால்நானும் கண்ணை மூடிப் படுத்ததனால் நினைப்பில் லாமல் ஒருதிசையில் நீட்டிக் கொண்டேன் கால்களையே.