இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44
தேரைக்கு மேலே பெரியதாய்த்
தலையை நீட்டிக் கிடந்தவேர்
இறைவன் ஏறி வந்ததோர்.
தேரை நிறுத்தி விட்டதே!
வேருக் கேன்ன ஆணவம்
வெட்டித் தள்ள வேண்டுமே
வெட்டத் தக்க கோடரி
விரைவில் கொணர்வீர்?? என்றனர்.
கூடி யிருந்தேரர் சொல்லவே
குதித்துச் சென்றார் சிறுவரே ஓடி வந்தார்; கோடரி
ஒன்று கொண்டு வந்தனர்.
வெட்டப் போகும் போதிலே
வேரும் நடுக்கம் கொண்டதே வேருக் குரிய மரமுந்தான்
நெஞ்ச மொடுங்கிப் போனதே!
தெய்வம் என்றன் தெய்வமே
சிறிது பொறுத்தல் வேண்டுமே
சிறியேன் வேரில் தடுக்கியே
தேரும் நின்ற துண்மையே.
உைண்மை யதுதான் ஆயினும்
உரிய பிழையும் என்னதோ?
வைய கத்தில் நானுயிர் .
வாழ வழியும் இல்லையோ?