பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51



காட்டில் விருந்து

வெள்ளைக் காரத் துரைஒருவர் விட்டின் முன்னே அமர்ந்திருந்தார் பள்ளம் விழுந்த வயிற்றோடோர் பட்டிக் காட்டான் அங்குவந்தான். பசியால் மிகவும் வாடுகிறேன் பண்பு மிக்கீர் சிறிதுணவு புசிக்கத் தந்தே உதவிடுவீர் புண்ணியம் உண்டாம் என்றுரைத்தான். கருப்பர்க் குணவு கொடுப்பதில்லை கண்டிப் பான கொள் கையிது வெறுப்பைக் கிளறி விடாதேநீ விரைந்து போவென் றரட்டிநின்றார். குடிக்கத் தண்ணிர் சிறிதேனும் கொடுப்பீர் துரையே எனக்கெஞ்ச அடிக்கத் தடியொன் றெடுத்துவந்தார் அந்த வெள்ளைத் துரைப்பெருமான் அஞ்சி ஒடிச்சென்றுவிட்டான் அந்தப் பட்டிக் காட்டானும் கொஞ்சங் கூடக் கவலையின்றிக் குந்திப் புகைவிட் டார்துரையே.