இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53
சோறு வடித்தான்; மான்கறியும்
சுட்டு வைத்தான், வெள்ளையரும் வேறு பாடு கருதாமல்
விருந்தைச் சுவைத்து மகிழ்ந்தாரே!
கயிற்றுக் கட்டில் ஒன்றினிலே
கவலை யின்றித் தூங்கியவர் வெயிலின் கதிர்கள் குடிசையுளே
விழுந்த பிறகு கண்விழித்தார்! பொழுது புலர்ந்தது; நகருக்குப்
போகும் வழியைச் சொல்லிடுவாய்? எழுந்து நின்று துரைகேட்டார்
இருங்கள்: நானும் வருகின்றேன்!??
காட்டின் எல்லை வரையந்தக்
கருப்பன் துரைக்குத் துணைசென்றான்
தோட்டம் ஒன்றின் அருகினிலே
துரையை விட்டுத் திரும்பினனே!
வேற்று நாட்டான் எனக்கேநீ
விருந்து வைத்தாய்; துணைவந்தாய்
போற்று கின்றேன் உன்பண்பைப்
பொன்போல்! நன்றி செலுத்துகிறேன்.
- ஏதும் உதவி வேண்டுமெனில்
என்னைக் கேட்பாய்?? என்றுரைத்தார் பேதம் காட்டா திருந்தாலே பெரிய உதவியதுவாகும்! шт—4