இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59
கூட வாழும் பறவைகளை - நீ
கொடுமைப் படுத்து கின்றாயாம்!
வாடப் பிறரைத் துன்புறுத்தி-இனம்
வளர்த்துக் கொள்ளத் துணிந்தாயாம்!
கூடு கட்டிக் கொள்ளாமல்-நீ
குடும்பம் நடத்து கின்றாயாம்
பாடு பட்டே உழைக்காமல்-நீ
பலனைத் திருடிக் கொண்டாயாம்!
முட்டை யிட்டாய் பிறர்கூட்டில்-அது
மோசம் அன்றோ கருங்குயிலே
இட்ட முட்டை தமதென்றே-அவை
இருந்து நம்பி அடைகாக்கும்.
பாசத் தோடே அடைகாத்தே - அன்பும் பற்றும் கொண்டே காப்பாற்றி
மோசம் போன தறியும் கால்-மனம்
முறிந்து போவ தறியாயோ?
இட்ட முட்டை தனை நீயே - சொந்த
இடத்தில் வைத்தே அடைகாத்தால் நட்டம் என்ன வந்து விடும்?-பிறர்
நலத்துக் கிடையூ றேன்செய்தாய்?
பொரித்து வெளியில் வந்தவுடன்-உன்
பொல்லாக் குஞ்சு பிறகுஞ்சைச்
சரித்துக் கீழே தள்ளி விடும்-அவை சாகச் செய்யும் அஞ்சாமல்: