இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64
நெறிமன் றத்தின் தலைவர்களும்-மெய்
நீதி யறிந்து வாழ்த்தினராம்! சிறிய குயிலும் இனத் துடனே-ஒன்றாய்ச்
சேர்ந்து பண்பாய் வாழ்ந்ததுவாம்! குக்கூ வென்றே தேன்குரலில்-அந்தக்
குயிலும் பாடப் பறவையெலாம் அக்கக் கென்றே தாளமிட-இசை
யருவி கானில் ஓடியதாம்!
எங்கும் மகிழ்ச்சி! இன்பமயம்!-குயில்
இசையில் காடே திளைத்ததுவாம்
திங்க ளோடு செங்கதிரும்-அங்கு
சேர்ந்து நின்று கேட்டனவாம்!