பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


நெறிமன் றத்தின் தலைவர்களும்-மெய் நீதி யறிந்து வாழ்த்தினராம்! சிறிய குயிலும் இனத் துடனே-ஒன்றாய்ச் சேர்ந்து பண்பாய் வாழ்ந்ததுவாம்! குக்கூ வென்றே தேன்குரலில்-அந்தக் குயிலும் பாடப் பறவையெலாம் அக்கக் கென்றே தாளமிட-இசை யருவி கானில் ஓடியதாம்! எங்கும் மகிழ்ச்சி! இன்பமயம்!-குயில் இசையில் காடே திளைத்ததுவாம் திங்க ளோடு செங்கதிரும்-அங்கு சேர்ந்து நின்று கேட்டனவாம்!