பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பரிமாறும்போது என் மனைவியைப் பார்த்து “மீனை நிறையவை. தொட்டுக்கக் கொஞ்சம் சாப்பாடு வை. நீயும் சாப்பிடு. உடம்புக்கு நல்லது” என்று கூறுவார்.

கவிதை அவர் சொல்ல நான் எழுதுவேன். பிறகு திருத்து வார். துண்டு துண்டாக வேடிக்கைக்குச் சில கவிதை கள் சொல்வார். நான் எழுதி முடித்ததும் படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்துப் போட்டுவிடுவார். திருச்சி வானொலி நிகழ்ச்சிக்காகத் தொழில்’ என்ற தலைப் பில் பாவேந்தர் கவிதை சொல்ல என் மனைவி எழுதி னாள். அக்கவிதை பாரதிதாசன் கவிதைகள்-இரண் டாம் தொகுதியில் உள்ளது.

விருதுநகரில் திருக்குறள் மாநாடு. பெரியார் பேசும் போது, மற்ற புராண இதிகாசங்களைப் போலத் திருக் குறளும் மோசந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இதுவும் தமிழ ருக்கு ஒவ்வாத நூலே' என்று கூறினார். பெரியாரு குப்பின் பேச எழுந்த பாவேந்தர் பெரியார் பேச்சை மறுத்தார். லேசாகக் கூட்டத்தில் அதிருப்திக்குரலும், ஆரவாரமும் எழுந்தது. பாவேந்தர் பேச்சை முடித்துக் கொண்டார். பிற்பகல் நிகழ்ச்சிக்குப்போக வேண்டாம் என்று கூறி இவரைத் தடுத்து நிறுத்தி விட்டோம். விருதுநகரிலிருந்து திரும்பும் போது நாங்கள் ஏறிவந்த புகைவண்டி திருப்பரங்குன்றத்தை நெருங்கிக் கொண் டிருந்தது. இருப்புப்பாதை அருகில் தொழிலாளர் குடி யிருப்பு கட்டப்பட்டிருந்தது. பெட்டிபோல் இருந்த அந்தச் சிறிய வீடுகளைப் பார்த்த பாவேந்தர் "நூறு புறாக்கள் குடியிருக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

மணிவிழாச் சமயத்தில் ஒருநாள் கவிஞர் திருலோக சீதா ராம் பாவேந்தர் தங்கியிருந்த அசோகாலாட்ஜ் அறைக்கு வந்தார். சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம் மாள் திருச்சியில்தான் இருக்கிறார். போய்ப் பார்த்து