பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாவேந்தர் பாடல்களை மேடை தோறும் பாடியும் ஏடுதோறும் எழுதியும் தான் தன் மான இயக்கம் வள்ர்ந்தது; தி.மு.க ஆட்சிப் பீடம் ஏறியது. தமிழ் மக்கள் உள்ளத்தில் சீர்திருத்தப் புரட்சியையும், தமிழக அரசி யலில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஆற்றல் இவரது எழுத்துக்குத் தான் இருந் தது. அழகிய சொல்லுக்கும் ஆணித்தரமான கருத்துக்கும் அறிஞர் அண்ணாவே இவரிடத்

ல் ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறார். இவையாவும் முறைப்படி ஆய்வு செய்தற் குரியவை. இலக்கிய ஆராய்ச்சி நடத்தும் என் இளைய தலைமுறையினரைக் காணும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இவற்றை அடிக்கடி நினைவூட்டுவதுண்டு. பாவேந்தர் எழுது கோல் தொடாத கருத்து எதுவுமில்லை; அவர் தொட்டு இலக்கிய மதிப்புப் பெறாத சிந்தனை எதுவுமில்லை. இன்றைய தமிழர்கள் எந்தக் கருத்துக்கு மேற்கோள் காட்ட வேண்டுமென்றாலும், திருவள்ளுவரிடம் செல்லவேண்டும்: அல்லது பாரதிதாசனைத் தேடி வர வேண்டும். திரு வள்ளுவரிடம் காணப்படாத இன்றைய புதிய சிந்தனைகளுக்குப் பாவேந்தரை விட் டால் வேறு யாருமில்லை, பாவேந்தர் ஒரு தனிப்பட்ட கவிஞர் அல்லர்; அவர் கவிஞர் களின் அணி வகுப்பு.

ஈரோடு முருகு 15-10-81