பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹调 அவரவர் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு ஆடித்திளைக் கலாம்; ஆடித் திளைப்பதோடு முத்துக்களை அள்ளி அள்ளி வந்து அணிகளாகத் தொடுக்கலாம். அந்த மகாகவியின் கவிக் கடலில் ஆடித்திளைத்து முத்துக்களை அள்ளிக் கொணர்ந்து தெள்ளுதமிழ் மாலை சூடிய அறிஞர்களில் பேராசிரியர் குறிப் பிடத் தகுந்தவராவார். தமிழால் உலகளந்த பேராசிரியரின் தமிழ்ப்பணி சிறக்க மகாகவியின் அருள் மேலும் மேலும் பொழியட்டும். மோனத் தமிழையும் ஞானத் தமிழையும் கானத் தமிழாக்கிக் கட்டுரைகளாக வடித்துதவிய பேராசிரி யரின் தமிழ்ப்பணி சிறக்கட்டும். பல்லாண்டு சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் கருணைக்கு இறைஞ்சுகிறேன், வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!! வாழிய பாரதம். சென்னை-600 005 இரா.கு.நாகு. 22-11-1982 பேராசிரியர் - மாநிலக் கல்லுரி.