பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குருகுலப் போராட்டம்

பாதிரியார்கள் அஞ்ஞானிகளை யெல்லாம் மெய் ஞானிகள் ஆக்குகிறோம் என்று சொல்லி ஞானஸ் நானம் செய்து கிறித்தவ மதத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

கிறித்தவ மதத்தில் சேர்ந்தவர்கள், கிறித்தவப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு புது வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள்.

பாதிரிமார்கள் அஞ்ஞானிகளை மெய்ஞ்ஞானிகளாக்கினார்களோ இல்லையோ, மனிதர்களாக்கினார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஏனெனில், நாட்டு முதுகெலும்பு போன்ற ஏழை மக்கள் சாதிக் கொடுமையால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு விலங்குகளினும் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.

மதம் மாறிய இந்த மக்களுக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை கிடைத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்த நிலையில் நாட்டுத் தலைவர்கள் பலர் வெள்ளைக்காரனின் கல்வி முறையை மாற்றி நம் நாட்டுப் பண்போடு கூடிய கல்வியை வளர்க்க வேண்டு மென்று கருதினார்கள்.

நாட்டுத் தலைவர்கள் மனத்திலே இந்த எண்ணம் அரும்புவிட்டுக் கொண்டிருந்தது.