பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்தா முனிவரும் ஈரோட்டண்ணலும்

25

தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் தமிழர்கள் அவரைத் தெய்வமாகவே மதித்தார்கள்.

அவருடைய வாய்ச்சொல் ஒவ்வொன்றும் தெய்வ கட்டளையாகவே மதிக்கப்பட்டது.

தமிழ் நாட்டு மும்மணிகளிலே, தமிழ் மக்கள் பெரிதும் போற்றியது ஈரோட்டு அண்ணலைத்தான். அந்த ஈரோட்டாரோ வார்தா முனிவரின் வாய்ச் சொல் ஒவ்வொன்றுக்கும் செயல்வடிவம் கொடுத்த தீவிரவாதியாக விளங்கினார்.

கள்ளுக்குடிப்பதால் ஏழை மக்களின் குடும்பங்கள் சிதைந்து போகின்றனவே என்று வார்தா முனிவராகிய காந்தியடிகள் வருந்திப் பேசினால்,

கள்ளுக்கடை மறியல் நடத்தி - குடிப்பதை நிறுத்துங்கள் என்று போராட்டம் நடத்துவார் ஈரோட்டு ஏந்தல்.

கள்ளிறக்குவதைத் தடுப்பதற்காக தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டித் தள்ளிவிட்டார் ஈரோட்டார்.

கதர்த்துணி யணிவதால் இந்த நாட்டின் ஏழை மக்களைக் காப்பாற்ற முடியும் என்று காந்தி மகான் கூறினால், கதர்த்துணி மூட்டைகளைத் தோளிலே சுமந்து சென்று தெருத் தெருவாகக் கூவி விற்று வருவார் ஈரோட்டார்.

கு-2