பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தீட்டுண்ணா
என்ன நயினா?

ஒமாந்துர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல தலைவர். பழுத்த காந்திய வாதி. கடைசி வரை காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர். எளிமையான தோற்றமுடையவர். எப்பொழுதும் தூய வெள்ளைக் கதராடையே அணிவார். ஆடையைப் போலவே தூய வெள்ளை மனம் படைத்தவர். 1948ஆம் ஆண்டு வாக்கில் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலம் தமிழக காங்கிரஸ் ஆட்சி யின் பொற்காலம் என்று கூற வேண்டும். ஏனெனில் அவருடைய ஆட்சியில் தான் எவ்வித ஊழலுமற்ற ஒரு செம்மையான அரசு நடந்தது.

அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இராமசாமி ரெட்டியார் பல ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் செயற் குழுவில் உறுப்பினராக இருந்தார். இராமசாமிப் பெரியாருக்கும், வரதராசுலு நாயுடுவுக்கும், திரு விக வுக்கும் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தார். இந்த முப்பெருந் தலைவர்களுக்கும் ஒத்துழைக்கும் சிறந்த தொண்டராக விளங்கினார்.