பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்

39

நம் பண்டைய பெருமையைக் காப்பாற்றுவதற்கென ஏற்பட்ட குருகுலத்தில், வெள்ளையர் கலாச்சாரம் நுழைய முடியாத குருகுலத்தில், தன் பிள்ளையும் சேர்ந்து படிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆங்கிலக் கல்வியின் தீமையை மேடையில் பேசிக் கொண்டே தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கான்வென்டுக்கு அனுப்பும் இக்காலத் தமிழர் தலைவர்கள் போலில்லாமல் தன் பிள்ளையை பாரதக் கலாச்சார முறைக் கல்வி பயில குருகுலத்தில் சேர்த்து விட்டார்.

பையன் பள்ளியில் பயின்றான். ஆறு மாதங்கள் ஓடின. அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்காகப் பள்ளி மூடப்பட்டது. பிள்ளைகள் தத்தம் பெற்றோரைப் பார்க்கச் சொந்த ஊருக்குப் போய் வர அனுமதிக்கப் பட்டார்கள்.

ஒமாந்துரார் பையனும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

கட்சி வேலைகள், தொண்டு, மாநாடு என்று பல நாள் வெளியூர்களிலே சுழன்றுகொண்டிருந்த இராமசாமி ரெட்டியார் வீட்டில் ஒய்வாக இருந்த ஒரு நாளில் தன் மகனோடு பேசத் தொடங்கினார்.

பையனின் படிப்பு எப்படி யிருக்கிற தென்று விசாரிக்கத் தொடங்கினார்.