பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திட்டுண்ணா என்ன நயினா?

45

தனித்தனிச் சாப்பாடு - தனித்தனி தண்ணிர்ப் பானை - சாதிவேற்றுமை - உயர்வு தாழ்வு - பெரியாருக்குச் சினம் பொங்கியது.

அந்தப் பார்ப்பனரை மிக உயர்ந்தவரென்று நம்பினோமே - நல்ல தேசபக்தர் என்று மதிப்புக் கொடுத்தோமே - தமிழர்கள் பணத்தை யள்ளி யள்ளிக் கொடுத்தோமே!

இதைச் சும்மாவிடக்கூடாது என்று கொதித்துப் பேசினார் பெரியார்.

ஒமாந்தூரார் செல்வாக்குப் பெற்ற தலைவர். அவர் இப்பிரச்சினையை உடனடியாக காங்கிரஸ் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மற்ற தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர் இது பற்றி அறிந்தும் பேசாமல் இருந்துவிட்டனர். ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்ட பேரது, அவர்களும் மனம் நொந்து குருகுலத்தில் நடந்த கொடுமைகளை எடுத்துக் கூறினர்.

அவசரச் செயற் குழுக் கூட்டம் ஒன்று கூடுமாறு அறிக்கை விட்டார், ஈரோட்டுப் பெரியார்.