பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

இந்திய நாடெங்கும் இன்று சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் நீண்ட நெடு நாட்களாக முன்னேற வொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாழ்த்தப்பட்ட இனத்தாரும் மற்ற மேலாதிக்க இனத்தாரைப்போல் வாழ்க்கை உரிமைகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எழுச்சிக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.

ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும், குஜராத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இன்னும் எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்புணர்வின் தாயகம் தமிழகமே! இந்த விழிப்புணர்வைத் தொடக்கத்தில் நாட்டில் உண்டாக்கியவர் தந்தை பெரியாரே!

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் மேலாதிக்கமுடையவர்கள், தம்முடைய எல்லா ஆதிக்க சக்திகளையும்