பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

55

தவறுகளைத் திருத்திக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவற்றை நிலைநாட்டுவதற்குப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து கொள்ளுகிறார்கள் என்பதற்கு இந்தத் திருத்தம் நல்ல எடுத்துக் காட்டாகும்.

இந்த மூன்று திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திரு எஸ். இராமநாதன் அவர்கள் நான்காவதாக ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

பிறப்பினால் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூக வாழ்க்கையில் பாராட்டக் கூடாது என்று இந்தக் குழு கருதுகிறது. இந்தக் கொள்கையை தேசிய இயக்கம் தொடர்பான எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. சேரமாதேவி குருகுலத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த உதவுமாறு இந்தக் குழு

1. தேவகோட்டை வி. தியாகராசச் செட்டியார்

2. எஸ். இராமநாதன்

3. ஈரோடு வே. இராமசாமி

ஆகியவர்களைக் கண்காணிப்புக் குழுவாக நியமனம் செய்கிறது.

திரு எஸ். இராமநாதன் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்த பிறகு, சி இராசகோபாலாச்சாரியார் மீண்டும் தலையிட்டுப் பேசினார்.