பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீட்டுண்ணா என்ன நயினா

61

வேதம்

சாஸ்திரம்

வருணாசிரம தர்மம்

இவற்றை நியாயப்படுத்தி வேத கலாச்சாரம் தான் தங்கள் பாரத கலாச்சாரம் என்றும். அதை நிலை நாட்டுவதே தங்கள் கடமை யென்றும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

வ.வே.சு. ஐயரையே நினைத்துப் பார்ப்போமானால் அவர் பெரிய பண்டிதர். பல மொழிகள் அறிந்தவர். நல்ல இலக்கியப் பயிற்சி உள்ளவர். வேதம் உபநிடதம் போன்ற நூல்கள் மட்டுமல்லாமல், வடமொழி இலக்கியங்களும், கம்பராமாயணமும், சங்க நூல்களும், திருக்குறளும் பயின்றவர். கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

ஆங்கில இலக்கியங்களும் இலத்தின் மொழி இலக்கியமும் கற்றவர்.

மகரிஷி என்று பாராட்டப்பட்டவர். மேலை நாடுகளுக்குப் போய் வந்தவர். பல பெரிய மனிதர்களோடு பழகியவர். அவரே ஒரு பெரிய மனிதராக மதிக்கப்பட்டவர்.

பழந்தமிழர்களின் நாகரிகச் சிறப்பை நன்கு தெரிந்தவர்.