பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

குருகுலப் போராட்டம்

பல கூட்டங்களில் காந்தியடிகள் வருணாசிரம தருமத்தை விளக்கிப் பேசினார்.

1927ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சுதேசமித்திரன்” நாளிதழ் ஒன்றில் இப்படி காந்தியடிகள் பேசிய பேச்சு - வருணாசிரம முறையை ஆதரித்துப் பேசிய பேச்சு வெளியிடப் பட்டிருக்கிறது.

அது இதுதான்;

“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.

பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜன சேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.

எளியவர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல்லோரிலும் மேம்பட்டவனாகிறான்.

இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் - கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.