பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

குருகுலப் போராட்டம்


இதைக் கண்ட பார்ப்பனர்சுள், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தால் சாதிகள் ஒழிவதற்குப் பதிலாக வளர்ச்சியடையுமே என்று கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்கள். ஆடு நனையுதே என்று ஓநாய் கண்ணீர்விட்டதுபோல் உள்ளது இன்றைய நிலை.

ஆம்! சாதிகள் வளர்ச்சியடையும் தான். உண்மையில் ஒவ்வொரு சாதி மக்களும் வளர்ச்சியடைவார்கள்.

சமூகநீதி செயல்பட்டால் ஒவ்வொரு சாதிக்காரரும் உயர்ந்த பதவிக்குவர முடியும். அது மட்டுமல்ல அவரவர் எண்ணங்களுக்குத் தகுந்தபடி மேல் நிலைக்குவர முடியும்.

நீதிபதிப் பதவியோ, அமைச்சர் பதவியோ, கவர்னர் பதவியோ, கலெக்டர் பதவியோ எந்தப் பதவியாக இருந்தாலும் பூசாரிப் பதவியாக இருந்தாலும் கூட 100 இடம் இருந்தால், சாதி விகிதாசாரப்படி, அந்தப் பதவிகளில்,

தாழ்த்தப்பட்டோர் 19 பேர்
மிகப் பிற்படுத்தப்பட்டோர் 25 பேர்
பிற்பட்டோர் 37 பேர்
முற்பட்டோர் 5 பேர்
இசுலாமியர் 5 பேர்
கிறித்தவர் பிறமதம் 5 பேர்
பழங்குடியினர் 1 வர்
பார்ப்பனர் 3 பேர்