பக்கம்:குறட்செல்வம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸101

மனிதர்களுடைய அனுபவத்திற்குள்ள பொருள்களை வைத்தே யாகும். --

இன்னும் தெளிவாகக் கூறினால் அப்பொருள்களை உற்பத்தி செய்வதற்கு மனிதன் செலவழித்த அறிவுஉடல் உழைப்புக்களை மையமாகக் கொண்டதேயாகும். பொருள்களை உற்பத்தி செய்வதற்குரிய உழைக்கும் சக்தியை எவர் உடையவராக இருக்கிறாரோ அவரே அந்த அளவுக்குப் பொருள்களையோ நாணயங்களையோ, பெறவும் அனுபவிக்கவும் உரியவர் என்ற நியதியே உயர்ந்த ஒழுக்கமான நியதி. இந்த நியதி நின்று நிலவி னால் நீதியும் நின்று நிலவும். • , . . .

இன்று நம்மிடையில் இந்த நியதியுமில்லை; நீதியும் இல்லை. உழைப்பென்றால் இன்னதென்றே அறியாத ஒரு நூறு பேர்களிடம் பல நூறு கோடியல்லவா முடங்கிக் கிடந்திருக்கிறது. இந்த முடக்கத்தை உடைத்து, மக்கள் மன்றத்திற்கு மடைமாற்றிய பெருந்தகைமை சான்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, இந்த நாட்டின் வரலாற்றில் புதுயுகத்தைத் தோற்றுவித்து, புகழ்பெற்று விளங்குகிறார்கள். . -

பொருள் என்பது, மனிதன், உண்டு, தின்று, உடுத்தி அனுப்விக்கத் தக்கனவே யாம். உடல் - உயிர்க்கூட்டு நிலைபெற்றியங்க இந்த எந்திர வாழ்க்கைக்கும் எர் பொருள் தேவை. அதுவே தம் உணவு. உணவில்லாதார், இவ்வுலகத்தில் இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடுதல் இயலாது. இதனையே திருவள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றார். .

இவ்வுலகம் என்பது அண்மைச் சுட்டு. இவ்வுலகம் என்பது குடும்பத்தைக் குறிக்கும். பொருள் பெற்று கூடித் துய்த்து மகிழ்வதுதான்ே குடும்பம்! அஃதில்லையேல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/103&oldid=1276406" இலிருந்து மீள்விக்கப்பட்டது