இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12✽ தவத்திரு குன்றக்குடி அடிகளார்
மேலும், வாழ்வியல் முறை எண்ணத்தின் வழி இயங்கி பயன் கூட்டுவிக்குமே அன்றி, செயல்கள் வழி மட்டுமல்ல. மனத்தூய்மை இன்றிச் செய்யப்பெறும் அறங்கள் செய்பவர்க்கும் பயன் தராது; செய்யப் பெறுவோர்க்கும் பயன் தராது.
மனத்தூய்மை வாழ்க்கை முழுவதையுமே சாதித்துத் தரக்கூடியது. அதை முயன்று பெறுவதே அறம். மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மையுடையன என்றே திருவள்ளுவர் கூறுகிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.