பக்கம்:குறட்செல்வம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

உடல், உணர்வு, அறிவு ஆகியவற்றை நிறைநல உழைப்பில் ஈடுபடுத்த மறுப்பவர்கள் காரியங்களைப் பற்றியே கவலைப்படுவார்கள். காரணங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குக் காரியம் நடந்தால் சரி. காரணம் வேண்டிய அவசியமில்லை.

இந்த மனப்போக்கு உடையவர்களே உயர்ந்த மாளிகையைக் கட்டியவர்கள், மதிற் சுவர்களைக் கட்டிய வர்கள், பூட்டுகளைப் படைத்துத் தந்தவர்கள். களவு, காவல் தத்துவத்தின் படைப்பாளர்கள். இவர்களே நியதியாகிய விதிக்கு இல்லாத வலிமையை உண்டாக்கிய

选期了恐ö”。 -

காரியங்களைப் பற்றிக் கவலைப்படுவது பயனற்றது. ஆனால், காரணங்களைப் பற்றிக் கவலைப்படுதல் வாழ்க்கையின் இன்றியமையாக் கடமை. துன்பத்தின் காரணம் தீமை. துன்பம் சேய்: தீமை தாய். அது என்ன தீது? தன்னையே சுற்றி வட்டமிடும் தீமை.

ஒன்றைப் பிடித்துக் கொள்ளாமல் தன்னைத்தான்ே சுற்றினால் மயக்கம் வராதா? வேடிக்கைக்காக வேண்டுமா னால் ஓரிரண்டு தடவை சுற்றலாம். பக்திக்காக வேண்டுமா ன்ால் இன்னும் சில தடவை சுற்றலாம். இந்த இரண்டு வகையில் சுற்றுவதற்கும் அடிப்படை உணர்வு உண்டு.

அந்த உணர்வுக் கலப்பின் சிந்தனையை, நிறுத்திச் சுற்றினாலேயே பொருளுண்டு. மயக்கமும் வராது. உணர்வின் ஆற்றல், மயக்கத்தோடு போராடி மயக்கத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும். வெறும் சுற்று வெற்றுச் சுற்றேயாம். மயக்கத்தைத் தரும். அஃதென்ன உணர்வு? எல்லா உலகமும் ஒன்று. ..

எவ்வுயிரும் எமதுயிர் என்ற ஆன்மநேய ஒருமைப் பாட்டினை-மனிதகுல ஒருமைப்பாட்டுனர்வினை விண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/140&oldid=1276477" இலிருந்து மீள்விக்கப்பட்டது