பக்கம்:குறட்செல்வம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆதலால் அரசு மக்களிடமுள்ள குற்றத்தை காணு மானால் அந்தக் குற்றங்கள் தோன்றுதற்குரிய தன் னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான்் நாட்டு மக்களிடையே குற்றங்கள் தோன்றுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமற் போகும். எவ்வளவு சிறந்த முற்போக்கான அரசியல் கருத்து என்பதை எண்ணி மகிழ்ந்து செயற்படுத்த வேண்டும். இதனை,

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு. . என்று திருக்குறள் பேசுகிறது.

அரசின் தன் குற்றம் நீங்கிய அளவிலேயே, பிறர் குற்றம் ஒன்று இல்லை யென்பது உணரத்தக்கது. ஆனால் இன்றைய நடைமுறையில் அரசுகள் அதிகார அமைப்பின் மேல்மட்டங்களாக விளங்குகின்றனவே யொழிய, அற நெறியின் மேல்மட்ட அமைப்புகளாக விளங்கவில்லை, ,

ஆட்சியின் வட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு இலாபம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பலரும் அந்த மையத்தைப் போட்டா போட்டி மனப் போக்குடன் வட்ட மிடுகிறார்கள். அங்கு ஆர்ப்பாட்டமிருக்கிறது. ஆரவாரம் இருக்கிறது. போட்டா போட்டிகள் இருக்கின்றன. தந்திரங்களும் மந்திரங்களும் தலைகாட்டத் தொடங்கி விட்டன.

இவைகள் அரசு அறநெறிச் சார்பினின்றும் பிறக் கின்றனவோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுமட்டுமின்றி அரசின் அறிக்கைகளும்கூட குற்றங் களை கண்டுபிடிப்பதில் அரசு சாதித்த சாதனைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/158&oldid=1276490" இலிருந்து மீள்விக்கப்பட்டது