இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறட்செல்வம்🞸33
வெய்யிலின் காய்ச்சலிலிருந்து ஒரோவழி தப்பித்துக் கொள்ள மூடியும். வெளியில் தலைக்ாட்டாமல் மண்ணின் உள்ளேயே புழு வாழுமானால் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அறக்கடவுளின் காட்சியிலிருந்து அன்பில்லாத மனிதன் தப்பித்துக் கொள்ள முடியாது. அறக்கடவுள் எல்லாமுமாய்-முழுவதுமாய் இலங்குகிறார். அவரது பார்வை ஆழ்ந்தகன்றது. ஆதலால், அன்புடையராக வாழ்தலும், அறக்கடவுளின் கருணையில் வ்ளர்தலும் தமது கடமை.
அன்புடையராக வாழ்தலின் மூலம் தற்காத்துக் கொள்ளுதல் முன்னேறுதல், இன்பம் துய்த்தல், திருவருள் நிலை பெறுதல் ஆகிய பேறுகள் கிடைக்கின்றன.
அன்பின்மையால் இவற்றை இழக்கிறோம். அழிவும்: ஏற்படுகிறது. -
என்பில் அதனை வெயில்போலக் காயுமே அன்பில் அதனை அறம்.
O දී) © Q C;