பக்கம்:குறட்செல்வம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்35

இயற்கை நியதியிலிருந்து மரம் விலகி விடுதலின் காரண மாகப் பயன் தராத-பெறாத நிலையில் அது வற்றிப் போய் விடுகிறது.

அது போலவே, கொண்டும் கொடுத்தும், அன்பும் உறவும் காட்டி, கூடிவாழ வேண்டிய மனிதன், அன்பு காட்டும் ஒழுக்க நெறியிலிருந்து விலகியவனின் சுற்றுச் சூழல் வறண்ட பாலைவனமாகி விடுகிறது. அன்பைப் சோரிதற்குரிய வாய்ப்பையும், அன்பைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் அவன் இழந்து விடுகின்றமையின் காரண மாக வற்றல் மரம்போலச் சாரமற்றவன் ஆகிவிடுகிறான்.

வற்றல் மரம் எப்படித் தளிர்க்காதோ, அதுபோலவே மணத்தகத்தே அன்பில்லாதவனின் வாழ்க்கை சிறக்காது. ஆதலால், மற்றவர்களிடத்தே மனங் கலந்த அன்பு காட்டுவதே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுதற். குரிய வழி என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி. ஆம், பிறரை வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ் தலுமே நல்வாழ்க்கையின் இயல்பு என்ற உண்மையினை அழகாக உவமையின் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்து கின்றார். இதோ குறளைப் பாருங்கள். -

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.

о 。事象

() () ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/37&oldid=1276339" இலிருந்து மீள்விக்கப்பட்டது