பக்கம்:குறட்செல்வம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்39

சிறுமை-சிறுமிய மரபுகள் அகத்திலும்கூடா-செயல்' களிலும் கூடா. சிறுமையினின்றே சிறுமை தோன்றும். பிறருக்குச் சிறுமை தரத்தக்க செயலைச் செய்கின்றவ. னும் சிறுமை உடையவனேயாம்.

இனிய பண்புகளிலிருந்தே இனிமை பிறக்கிறது. இனிமை-இனிய சொற்கள் இம்மை வாழ்வில் நண்பர் களைக் கூட்டுவிக்கும்; துன்பத்தை நீக்கும். இன்பத்தைப் பெருக்கும். அவ்வழி மறுமையும் கூட்டுவிக்கும். மறுமை இன்பததை அளிக்கவல்ல இறைவனும் இனிமை தவழும் புன்சிரிப்படையவன். ஆதலால், வருந்தி உழைத்துப் பெறக்கூடிய மறுமை இன்பத்தையும் இனிய சொற்களை வழங்குவதன் மூலமே எளிதிற் பெற்றுவிட முடியும் என்பது திருவள்ளுவர் கருத்து. . . . . .

ஆனால் உலகியலில் இந்த இனிய-எளிய usirtحيح வளராதது வியப்பாக இருக்கிறது.

சிறுமையுள் ங்ேகிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/41&oldid=1276341" இலிருந்து மீள்விக்கப்பட்டது