பக்கம்:குறட்செல்வம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸43

வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடப் பாடாக அவனை வாழ்த்துதல் வேண்டும். வாழ்த்துதல் மட்டும் இறைவனை மகிழ்விக்காது. அவன் உவக்ககூடிய வகையில் அவனுடைய அருமைக் காரியப்பாடாக இருக்கின்ற உயிரினங்களுக்குத் தொண்டு செய்தலும் ஒருவகை வழிபாடேயாகும். பல்வேறு உயிர்வர்க்கத்தின் உழைப்பினாலும், உதவியினாலுமே.நாம் வாழ்கின்றோம். மீண்டும் அந்த உயிர்வர்க்கத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டாமர் எனன்? அதுவே நன்றி காட்டும் பண்பு. அதுவே சிறந்த இறை வழிபாடு. - *

ஆண்டவன் எண்ணத்தோடு அல்லது திருவரும் சிந்தனையோடு நாம், தொண்டு செய்யவேண்டும். நன்றி காட்டுதலும் ஒருவகை வழிபாடேயாகும். -

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் கட்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/45&oldid=1276262" இலிருந்து மீள்விக்கப்பட்டது