பதிப்புரை
வள்ளுவரின் திருக்குறள், வாழ்க்கையின் ஒளிவிளக்கு.
உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கு மிகச் சிறந்த மதிப்பைத் தருவது பொதுமறையாகத் திகழும் தனிச் சிறப்புடைய திருக்குறளே.
திருக்குறளுக்குப் பல்வேறு விளக்கங்களும் விரிவுரைகளும் வந்திருந்த போதிலும், அனைவரும் எளிதிற் கற்று, தேர்ந்து ஒழுகி வாழ்க்கையில் மேன்மையுற மிகச் சிறந்த மேற்கோள்களுடனும், விரும்பி ஏற்கும் விளக்கங்களுடனும் வாழ்க்கைக்கியைந்த கருத்துக் கருவூலமாக 'கலைவாணி' புத்தகாலயத்தின் மிகச் சிறந்த திறனாய்வு நூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உலக மக்களின் சமுதாயச் சிறப்பினைக் கண்டு மகிழவும், வள்ளுவர் வழி மக்கள் தொண்டே மகேசன் தெர்ன்டு எனவும், என் கடன் பணி செய்து கிடப்பதே எனவும் நாளும் சலியாது சிறப்புற பணியாற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு மக்கட் சமுதாயமே மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.
வாழ்க்கைக்கு வளம் தரும் அறநெறிக் கருத்துக்களை மக்களுக்குப் பயன் தரும் முறையில் எளிய இனிய நடையில் ஏற்றம் தரும் வகையில் தந்தருளியுள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு இதய நன்றி.
அரியதோர் அணிந்துரை அளித்து ஆசிவழங்கி அருளும் காஞ்சி மெய்கண்ட தேவர் ஆதீன குரு மகா சந்நிதானம் சீலத்திரு. ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கும் மதிப்புரை தந்த மகிழும் கவியரசுக் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் இதய நன்றி.
மாந்தருலகம் இச்சிறந்த திறனாய்வு நூலை விரும்பி ஏற்றுப் பயன் பெற்று மகிழ எல்லாம் வல்ல கலைவாணியின் திருவருளை வேண்டுகின்றேன். I
கலைவாணி புத்தகாலயம்
—சீனி, திருநாவுக்கரசு
தி. நகர், சென்னை-17.