குறட்செல்வம்🞸85
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
என்று குறிப்பிடுகின்றார். தீயவை தீய பயத்தலால் என்ற சொற்றொடரும், தீயினும் என்பதிலுள்ள் உம்மையும் அறிவுக்கு விருந்து. ஆழச் சிந்திப்பாரின் அக உலகிற்குப் பாதுகாப்பு.
தீமை செய்வோர் தீமை செய்யட்டும், செய்து கொண்டே இருக்கட்டும். அதனால் நாய்கள் தாம் கக்கிய வற்றைத் தாமே தின்பது போலத் தம்முடைய செயல் களின் விளைவுகளை, அவர்களே அனுபவிப்பார்கள். அறக்கடவுள் சூழ்ந்து ஊட்டுவிக்கும்.
ஆதலால், அச்சமின்மை பேசிய திருவள்ளுவர் அஞ்சச் சொல்லுகிறார். தீயனவற்றிற்கு அஞ்சச் சொல்கிறார். புறத்தில் தாக்கும் தீமைகளைக் கண்டு அஞ்சுவது போலவே. ஏன்? அதனினும் ஒருபடி மேலாக அகத்தில் தோன்றித் தாக்கும் தீமைய்ைக் கண்டு அஞ்சச் சொல்கிறார். மடியில் தீயினைக் கட்டிக்கொண்டு, நானிலத்தில் நடப்பாரில்லை. அதுபோல் மனத்தில் தீமை தாங்கி நடப்பாருமில்லை என்கிற நிலை உருவாக வேண்டும். அதுவே வள்ளுவர் விரும்பும் உலகம்.
పిడీ . o 》, ു.
Wል 鲇 . s