29. யாக்கை பொறுத்த நிலம்
"நாடென்ப நாடா வுளத்தன என்பது திருவன்கு வர் வாக்கு. ஒரு நாடு பல்வளமும் கெழுமிய நாடிாக சில அமைந்து விடுவதுண்டு. -
நீர்வளமும், நிலவளமும் உள்ள நாடுகள் மட்டும் வளமுடைய்வனவாக இருப்பதில்லை. அந் நாட்டில் வாழும் மக்களுக்கும் வளத்திற்கும் தொடர்புண்டு. அதனாலன்றோ புறநானூற்றுப் புலவர், நாடு நாடாக இருந்தாலென்ன? காட்ாக இருந்தாலென்ன? கவலை இல்லை. அந் நாட்டில் வாழும் ஆடவர்கள் மட்டும் நல்லவர்களாக - உழைப்பாளிகளாக - உத்தமர்களாக இருப்பின் காடும் நாடாகும் - பள்ளமும் மேடாகும் என்றார். -
ஒரு நாட்டின் வளத்திற்கும், வறுமைக்கும், எழுச்சிக் கும், வீழ்ச்சிக்கும் அந் நாட்டு மக்களின் மனநிலையே அடிப்படையாக அமைகின்றது. கற்றோர் போற்றும் கலித்தொகையிலும் கூட மலைவாழ் மக்கள் அல்லன. செய்து வாழ்தலின் மலைபடு வளம் சுருங்குகிறது என்று கூறப்பெறுகிறது. - . ‘. . . . . . . . .
ஒரு தாய், தான்் பெற்றெடுத்து வளர்த்த அருமை யான பிள்ளை புகழ்மிக்க வாழ்வு வாழவேண்டும் என்று விரும்புகிறாள். அந் நோக்கத்தோடு வளர்க்கிறாள். . ஆனால், அவன் தவறுகள் பல செய்து தண்டனை க்கு