பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ισοστού μου பொருள் - - 109 மனம் கொண்டவன், நல்லதை நினைக்கும் நாயகனாக, நாடு போற்றும் நல்லவனாக, தகுதிமிக்கத் தலைவனாக, கண்டார் கை குவித்து வணங்கும் கலைஞனாக வாழ்கிறான். அப்படிப்பட்ட அற்புத அறிஞனுக்கு ஆற்றலாளனுக்கு அனைத்தும் கிடைக்கும், கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும், எல்லாம் கிடைக்கும். ஒருங்கே கிடைக்கும். உலக வாழ்வே இனிக்கும். - இப்பொழுது நாம் காணுகிற புதிய பொருளைக் காண்போம். மடிந்துபோதாத, மடியை மடியச் செய்கிற மடியில்லாத மன்னவனாக வாழ்கிற ஒரு மனிதன், தன் ஞானத்தால், அறிவார்ந்த அனுபவத்தால், அகிலத்தையும் - புகழால் பெறுகிற பேறும் பேரின்பமும் பெறுகிறான். - சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்றால், சுறுசுறுப்பானவன் மூளை, சொர்க்கத்தின் சுகந்த சோலை என்று கூறலாம். - - வசந்தத்தின் வளத்தை வாழ்வில் அனுபவிக்க, மடியை மடித்துவிடவேண்டும். முடித்து விடவேண்டும் அதற்கான ஆற்றல் மிகு தேகத்தை வளர்த்துக் கொண்டு, மனிதனாக வாழ்ந்து மன்னவனாக உயரவேண்டும். அதன் வழி, எல்லா நலனும் ஒருங்கே எய்திட, என்றும் இன்பத்தில் திகழ வேண்டும். மகிழ வேண்டும். - அத்தகைய வாழ்க்கையை அறிவாளர்களாகிய நீங்கள் நிச்சயமாக வாழ்வீர்கள். வாழமுடியும் மற்றவர்களையும் வாழ்விக்க முடியும். - - - - -