பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 39 இதை இன்றைய விஞ்ஞானம் வெகு.அழகாக விளக்கம் அளிக்கிறது. - உடலுறவின் போது தந்தை அனுப்புகிற விந்தில் உள்ள பல இலட்சம் விந்தணுக்கள், தாயின் கர்ப்பத்தை நோக்கிப், பல மணி நேரம் ஒடுகின்றன. ஒட்டத்தில் களைத்துப் போன விந்தணுக்கள் எல்லாம், களைத்து மரித்துப் போக, 100 முதல் 1000 pவ அணுக்கள்தான் கர்ப்பப்பை அருகே சென்றடைகின்றன. - . அவற்றில் எந்த ஜீவ அணு கர்ப்பத்தில் முட்டையுடன் கலக்கிறதோ, அதுவே ஜீவனாகிக் கொள்கிறது என்பது விஞ்ஞானம். - - அவற்றில் குழந்தைப்பிறப்பு என்பது, சிறப்பான ஆண் பெண் உறவில் அல்லது தவறான ஆண் பெண் உறவில் பிறக்கிறது என்றாலும், பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒத்ததுதான். அதிலும் வள்ளுவர் இங்கே சிறப்புத் தன்மை இல்லாமல் பிறக்கும் எல்லா உயிர்க்கும் ஒக்கும் என்கிறார். - ஆனால், அந்தக் காலத்திலிருந்து இந்தக் கால மக்கள் வரைசெய்கிற தொழிலை வைத்துச் சாதி பேதம் பார்த்து, நீதி முறை அழித்து மிருகம் என வாழ்கின்றனரே என்று வருந்தித்தான், செய்கிற தொழிலில் வேற்றுமை ஏன் என்கிறார் உடல் இருக்கிறது. உடலில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. அதில் ஓரிரண்டு உறுப்புக்களைத், திட்டுவதற்காக மக்கள் பயன்படுத்தி, மிகக் கேவலமாக, கொடுரமாகப் பேசுகிறார்கள், ஏசுகிறார்கள், என்றாலும், அந்த உறுப்புக்களுக்காகத்தானே அடித்துக் கொண்டு சாகின்றார்கள். உலகத்தில் நடக்கும் ஆயிரம் கொலைகளுக்கும் கோடிக் - கணக்கான வழக்குகளுக்கும்,அந்தச் சில உறுப்புக்கள் தாமே அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. என்றாலும், உடலில் ஒர் உறுப்புக் குறைந்தாலும்