பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் நெறி



வினைத்துணையதனிலே தனக்குறுபயனதை
        நினைப்பறுநலமதைப் போற்றுவரே

எந்த நன்றியைக் கொன்றவர் தனிலும்
செய்த நன்றியைக் கொன்றவர் தீயவர்

        என்பதே—அறம்—நண்பனே—இதில்
        உன்மனம்—தினம்—பண்படும்—வகை

இக்குறள் நெறியினை நற்றமிழி சையினில்
வைப்பது கண்ணனின் விருப்பமே.

தக்கவர் பாடிடக் கற்றவர் நினைவினில்
மிக்க எழிலுடன் இருக்குமே–சிறக்கும். (நன்'

 
 

10