இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
குறள் நெறி
8, வெஃகாமை.
அறத்துப்பால்
அதிகாரம்- 18
இராகம்-கமாஸ்
தாளம். அடை
கண்ணிகள்
1. நடுவின்றிப் பிறர்பொருள் கவராதே.நல்ல
குடிபொன்றிப் பழிமிஞ்சித் திரியாதே
படுபயன் பெரிதென்றே கருதாதே-அதன் கெடுதலை ஒருபோதும் மறவாதே.
2. சிற்றின்பம் சிறுவுணர்வின் விளைவாமே..அதனை
மற்றின்பம் விழைகுவோர் விரும்பாரே. பெற்றிடுவம் செல்வமென முனையாதே.அந்த வெற்றியிலே திருமகளும் இணையாளே.
3. இலமென்றே கவர்ந்திடல் இழிவாகும்-இது
புலன்வென்ற தூயவர்கள் வழியாகும் பலனேதும் குற்றமதில் குறையாகும்.கன்ம மலமாசும் தொலையாமல் துணையாகும்.
4. வசைதன்னை நினையாமல் துணியாதே.நல்ல
வாழ்வுநலம் பாழ்படுமே திருடாதே
இசைபெறும் கண்ணன்குறள் நெறியாலே வரும்
இன்பநிலை தானடைதல் முறையாமே.
22