இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இசையமுது
10. கொடுங்கோன்மை,
பொருட்பால், அதிகாரம்-56.
இராகம்-தோடி, தாளம்.ரூபகம்:
எடுப்பு
கொலையால் வாழ்வானிலும் கொடியன் கொடுங்கோலரசது புரிந்திடுபவன்
(கொ)
தொடுப்பு.
தலையான அறங்கள் தடுமாறிப்போக நிலையான முறையின்றி குடிகளை வதைப்போன் குலையாத மாமலை போன்றவனாயினும்
கோலதுவும் மிகுபொருளும் காலமதில் இழந்திடுவான்.
(கொ}
படுப்பு.
அல்லற்பட்டாற்றா தழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படையாம்.
முடிப்பு.
நல்லறநீதிகள் கல்லாதான் ஆட்சியில்
நில்லாதுநன்மையும் பெய்யாது வானமும் பொல்லாதகேடுகள் பொங்கிவருகுமே
25
25