பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது



28. அலர் அறிவுறுத்தல்.

இன்பத்துப்பால், அதிகாரம்.115.

இராகம்-சங்கராபரணம். தாளம்-ரூபகம்

எடுப்பு.

ஒருநாளே அவரைநான் கண்டேன்-பாங்கி தெருவினில் பழி தூற்றுறார் பாரடி (ஒரு)

தொடுப்பு.

பெருகுதடிகாமம் உருகுதடிதேகம் மருளுதடிமனம் மையலும் வளருதே (ஒரு)

படுப்பு.

ஊரவர் கெளவை எருவாய் அன்னை சொல் நீராகளும் நோயிதுவோ?

முடிப்பு.

யாரடி நெய்யாலே நெருப்பையணைப்பது கூறடி அலர்கண்டு குறையுமோ ஆசையும் (ஒரு)

சந்தம்.

பேசிடும் அலரினில்காதல் பெருகிவளர்ந்துருவாகி

கூசிடும் மனதினில்காமம் குறைவற நிறைந்ததாலே


53